சென்னை, ஜூன் 26- இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்தி மொழியை கட்டாயமாகப் படிக்க வேண்டுமென்று பல்கலைக் கழக மானியக்குழு அனைத்து மத்திய, மாநிலப் பல்கலைக் கழகங்க ளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கை யை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலா ளர் எஸ்.பாலா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த மே-31 அன்று மத்திய பாஜக அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கைக் குறித்து கருத்து தெரிவிக்க ஜூன் 30 வரை அவகாசம் கொடுத்துள்ளது. அந்த வரைவு அறிக்கையில் இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் இந்தியை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்ற முறையில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதன் விளைவாக மத்திய அரசு இந்தி மொழியை கட்டாயமாகப் படிக்க வேண்டியதில்லை என்று வரைவு அறிக்கையை திருத்தி வெளியிட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு மூலம் அனைத்து மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இந்தி மொழியை கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் தொடர்ந்து ஒரே நாடு, ஒரே மொழி என்ற தனது ஒற்றைக் கலாச்சாரத்தை கட்டாயமாகத் திணிக்க கடுமையாக முயற்சித்து வருகிறது. இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைத்து, ஒற்றுமையை சீரழிக்கும் இத்தகைய முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்திய நாட்டின் சிறப்பம்சமாகும். இதை உறுதி செய்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முதன்மை யான கடமை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.